- லால்சந்த் ராஜ்புத்
- ஐக்கிய அரபு நாடுகள்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- சிகே நாயுடு கோப்பை
- கடப்பா,
- ரயில்வே
- தின மலர்
* ஐக்கிய அரபு அமீரக அணியின் (யுஏஇ) தலைமை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புட் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
* கடப்பாவில் நேற்று நடந்த சிகே நாயுடு டிராபி கிரிக்கெட் போட்டியில் ரயில்வே – ஆந்திரா அணிகள் மோதின. ரயில்வேயின் தமன்தீப் சிங் பந்துவீச்சை எதிர்கொண்ட ஆந்திரா தொடக்க வீரர் வம்ஷி கிருஷ்ணா, அந்த ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர்களாகத் தூக்கி அசத்தினார். ரவி சாஸ்திரி (1985), யுவராஜ் சிங் (2007), ருதுராஜ் கெயிக்வாட் (2022) ஆகியோரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்தும் 4வது இந்திய வீரர் என்ற பெருமை கிருஷ்ணாவுக்கு கிடைத்துள்ளது.
* டி20 போட்டிகளில் 10,000 ரன் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் ஆஸமுக்கு கிடைத்துள்ளது (271 இன்னிங்ஸ்). வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் (285 இன்னிங்ஸ்) சாதனையை பாபர் முறியடித்துள்ளார்.
* அருணாச்சல் ஈடா நகர், கோல்டன் ஜூபிலி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கும் 77வது சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.
The post சில்லி பாயிண்ட்… appeared first on Dinakaran.